அதிரைமக்கள் இலவசமாகக் கொடுத்த நிலத்தில்தான் அரசு பொதுமருத்துவமனை, காவல் நிலையம்,பேரூந்து நிலையம்,மின்நிலையம் ஆகிய அரசு அலுவங்களும் செயல்பட்டு வருகின்றன.ஆனால்,நாங்கள் கிரயம் செய்து வாங்கிய நிலத்தில் தொழுவதற்காகக் பள்ளி கட்டுவதற்குத் தடையாகவும் இவர்களே தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்கள் என்பது தொகுதி எம்.எல்.ஏ ஆக இருக்கும் உங்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
ஆகவே விரைவில் கவிழப்போகும் மைனாரிட்டி அரசு தருவதாச் சொல்லும் தொலைக்காட்சிப் பெட்டியைவிட இறைவனைத் தொழுவதற்கு பள்ளிவாசலே எங்களின் உடனடித்தேவை என்பதை உங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
No comments:
Post a Comment