Monday, February 23, 2009

அதிரை ரயில்வே ஸ்டேஷன் பலகை


Khadir Mohideen Hr.sec.School, புளிய மரம்


இந்த புளிய மரம் மட்டும் இன்னும் நவீன காலத்து தாக்கத்தில் இந்நாள் வரை அழியவே இல்லை எனும் போது மனதுக்கு இதமாக இருக்கிறது.

Friday, February 20, 2009

ஆபத்தான அஜினோமோட்டோ

டாக்டர் கங்காசாம்பார், மீன் குழம்பு, ஃபிரைடு ரைஸ் என்று எல்லா உணவுகளின் ருசியையும், வாசனையையும் அதிகரிக்கப் பயன்படும் ஒரு டேஸ்ட் மேக்கர் அஜினமோட்டோ.. இன்று ஹோட்டல் உணவு மட்டுமல்லாமல் வீடுகளுக்குள்ளும் தன் ராஜ்ஜியத்தை விரித்திருக்கிறது அஜினமோட்டோ..தொடர்ந்து அஜினமோட்டோ எடுத்துக்கொண்டால் உடல் நலம் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது. இந்த அஜினமோட்டோவால் உடம்புக்கு நமக்கு அப்படி என்னதான் பிரச்னை?அதென்ன அஜினமோட்டோ?உணவில் வாசனையை அதிகப்படுத்துவதற்காக நாம் பயன்படுத்தும் ஒருவித வேதிப்பொருள் தான் இந்த அஜினமோட்டோ (Ajinomoto). உங்களுக்கொன்று தெரியுமா? அந்தக் காலத்திலெல்லாம், žனர்களும் ஜப்பானியர்களும் உணவில் வாசனையை அதிகப்படுத்திக் கொள்ள ஒரு வகையான கடல்பாசியை உபயோகித்தார்கள். இந்தக் கடல் பாசியில் தான் வாசனையை மேம்படுத்த உதவும் மோனோஸோடியம் குளுட்டோமேட் அதாவது M.S.G. என்ற வேதிப்பொருள் இருப்பது தெரியவந்தது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு அஜினமோட்டோ(Ajinomoto) என்ற கம்பெனி இதை வியாபார ரீதியாக தயாரிக்க ஆரம்பித்தது. நாளடைவில் அஜினமோட்டோ என்ற பெயரே இந்த வேதிப்பொருளுக்கும் நிலைத்து விட்டது

Sunday, February 8, 2009

லச்சியம் நிறைவேறியது


இந்த பள்ளிவாசல் அதிராம்பட்டினம் காதிர் மொகைதீன் பள்ளியில் உள்ளது. இதில் மாணவர்களுக்காக லுகர்,அசர்,மக்ரிப் ஆகிய தொழுகைகள் நடத்தபடுகின்றன. இதுவரை இந்த பள்ளிக்கு தரைபோடமல் இருந்தது.இதை பற்றி கூட கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த பள்ளிக்கு தரைபோடப்படுமா?என்ற தலைப்பில் கட்டுரை எழுதிஇருந்தேன். மாணவர்கள் கடைசி தடவையாக நவம்பர் 11 ந்தேதி பள்ளியை பார்வையிட வந்த தாளாளரிடம் இது பற்றி மாணவர்களால்சொல்லப்பட்டது. இதன் பலனாக இரண்டு மாதங்களுக்கு பிறகு நேற்று இந்த பள்ளிக்கு டைல்ஸ் எனப்படும் கல் போடும்பணி "அல்லாஹுவின் " அருளால் நடைபெற்றது. இதனால் மாணவர்கள் பள்ளி தாளாளருக்கும் அல்லாஹுவிற்கும் நன்றி கூறியுள்ளனர்
தத்துவப் பேராசிரியர், மாணவர்கள்

ஒரு தத்துவப் பேராசிரியர், மாணவர்கள் முன் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார். ஒரு காலி ஜார் எடுத்து பின் அதில் இரண்டு இஞ்ச் அளவுக்கு கற்களை நிரப்பினார். பின் மாணவர்களை நோக்கி, இந்தக் குடுவையில் ஏதும் நிறைந்திருக்கிறதா? என்று கேட்டார். மாணவர்கள் ஆம் என்றனர். பின் கொஞ்சம் கூழாங்கற்களை எடுத்து அதே குடுவையில் போட்டுக் குலுக்கினார். கூழாங்கற்கள் குடுவையில் ஏற்கனவே இருந்த சாதா கற்களுக்கு இடையில் புகுந்து நிறைந்தன. மறுபடியும் மாணவர்களைப் பார்த்து குடுவையில் ஏதும் நிறைந்திருக்கிறதா?! என்றார். மாணவர்களும் ஆம் என்றனர். பின் பேராசிரியர் கொஞ்சம் மணல் எடுத்து குடுவையில் போட்டுக் கலக்கினார். அது கற்கள், கூழாங்கற்களுக்கு இடையில் நிறைந்து மேலும் சிறு இடைவெளி கூட இல்லாமல் ஆக்கியது. மறுபடியும் மாணவர்களிடம் இந்தக் குடுவை நிறைந்திருக்கிறதா என்று கேட்டார். மாணவர்களும் ஆமாம் என்றனர்.
பேராசிரியர் பிறகு சொல்ல ஆரம்பித்தார்.
இந்தக் குடுவையை உங்கள் வாழ்க்கையாக நினைத்துக் கொள்ளுங்கள். திடமான கற்கள்தான் உங்கள் வாழ்வின் முக்கியமான குடும்பம், துணை, உங்கள் ஆரோக்கியம், உங்கள் குழந்தைகள். கூடவே இருக்கிற கூழாங்கற்கள் அடுத்து உங்கள் வாழ்வில் முக்கியமாக வருகிற வேலை, வீடு, உங்கள் கார் போன்றவை. உங்கள் வாழ்வில் மற்றவை எல்லாம் மணல்தான். ஸ்மால் ஸ்டஃப்!
நீங்கள் உங்கள் குடுவையை முதலில் மணலால் நிரப்பிவிட்டீர்கள் என்றால் பிறகு அதில் திடமான கற்களுக்கும், வழவழப்பான கூழாங்கற்களுக்கும் இடம் இருக்காது.
Take care of the rocks first!

Saturday, February 7, 2009

தேசத் தந்தையை ஆர் எஸ் எஸ் சுட்டதன் மர்மம் என்ன?
Posted: 24 Jan 2009 05:44 PM CST
கலிஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உடையவர்கள். அப்போது மதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது. நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனனவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள். ஒருநாள் இரவு நேரத்தில் கலிஃபா அவர்கள் தமது உதவியாளர் அஸ்லம் என்பாருடன் மதினாவின் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுகுரலும் வரக் கண்டார்கள்.கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள். கலிஃபா உமர் (ரலி) அவர்கள், அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று அவருக்கருகில் சென்றார்கள். அந்தப் பெண்மணி உமர் (ரலி) அவர்களை பார்த்ததில்லை என்பதால் வந்திருப்பவர் கலிஃபா என்பதை அறியவில்லை.உமர் (ரலி): “குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?”பெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்”உமர் (ரலி): “அடுப்பில் என்ன இருக்கிறது?”பெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன். இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத கலிஃபா உமர் அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா உமர் (ரலி) அவர்களின் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை உமர் எப்படி அறிவார்?” என்று வினவினார்.“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் உமர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.கலிஃபா உமர் (ரலி) அவர்கள் விரைந்து நகருக்குத் திரும்பி உடனே பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும் எடுத்து வைத்தார்கள். கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள். சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.அவர்களின் உதவியாளர் அஸ்லம் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார். உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான்தானே? அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்!”அஸ்லம் மிகவும் தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் உமர் (ரலி) அவர்கள். அஸ்லமும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார்.குடிசையை அடைந்த உமர் (ரலி) அவர்கள் மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள். அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படிந்தது.சிறிது நேரத்திற்குப் பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த உமர் (ரலி) அவர்களின் முகமும் மலர்ந்தது.உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் ‘அக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவினார்கள். அந்தக் குழந்தைகளின் தந்தை இறந்து விட்டதாகவும் அவர்களுக்கு ஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார். வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! உண்மையில் கலிஃபா பதவிக்கு உமரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”. அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா உமர் (ரலி) அவர்கள்தாம் என்பதை அம்மாது இன்னும் அறிந்து கொள்ளவில்லை!உமர் (ரலி) அவர்களும் ‘தாம் இன்னார்’ என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீர் கலிஃபாவை சந்திக்கும்போது அங்கே என்னை கண்டு கொள்வீர்” என்றார்கள்.கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அதன் பின்னர் மதினா திரும்பினார்கள். செல்லும் வழியில் தன் உதவியாளரிடம் சொன்னார்கள், “அஸ்லம், நான் ஏன் அங்கே அமர்ந்திருந்தேன் தெரியுமா? அக்குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்கள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடுவதையும் சிறிது நேரம் பார்க்க விரும்பினேன். அதனால்தான்.”வீரத்திற்குப் பெயர் பெற்ற உமர் (ரலி) அவர்கள், கருணையுள்ளம் உடையவராகவும் குடிமக்கள் மேல் அக்கறை கொண்ட பொறுப்பான தலைவராகவும் விளங்கினார்கள்.****************************************************"அந்த கலீபா உமர் ரலி போன்றுதான் இந்தியாவில் ஆட்சி நடத்தப்பட வேண்டும்" என்ற காந்தீஜீயின் கூற்றை ஏற்க பிடிக்காமல்,ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்த கோட்சே,நம் தேச தந்தையை சுட்டுக்கொன்றான்.
பேரூராட்சி தலைவர் பதக்கம் வாங்குவதால் நமக்குப் பெருமையா?
Posted: 24 Jan 2009 01:39 PM CST
நமதூர் பேரூராட்சி தலைவர் பற்றியும் அவர் அதிரை முஸ்லிம்களுக்கு செய்துவரும் துரோகங்கள் பற்றியும் அதிரை அல் அமீன் பள்ளிவாசல் தொடர்பாக தன்னுடைய உலக ஆதாயத்திற்காக அதிரை திமுக தலைவருடன் இந்து-முஸ்லிம்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடிக்கொண்டிருப்பது பற்றியும் அதிரை எக்ஸ்பிரஸ் விலாவாரியாக பிரித்து மேய்ந்திருப்பதை வாசகர்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள்.இவ்வாறிருக்க, வருகிற ஜனவரி 26 அன்று குடியரசு தினவிழாவில் கோட்டை அமீர் என்பவர் பெயரில் கொடுக்கப்படும் விருது ஒன்றை பெற இருப்பது பற்றி ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பகுத்தறிவு தலைவர் கருணாநிதி ஏற்கெனவே முஸ்லிம்களுக்கு கொடுத்த, கொடுத்துக்கொண்டிருக்கும் அல்வா போதாதென்று அதை பங்குபோட ஊரிலிருந்து ப்ளஷரில் பயணம் செய்கிறார்கள் அவருடைய நண்பர்கள்.நம் அப்பாவி தமிழீழ சொந்தங்களுக்கு கருணாநிதி கொடுத்துக்கொண்டிருக்கும் அல்வா புளித்து போயுள்ள நிலையில் ஏனங்கோ நீங்களும் பிளஷர் பிடித்து சென்னை போறீங்க? இவர் பற்றிய கருத்துக்கணிப்பு ஏற்கெனவே வலப்புற பட்டையில் பல்லிலித்துக்கொண்டிருக்கிறது.அல் அமீன் பள்ளிவாசல் விசயத்தில் திமுகவிற்கு முஸ்லிம் இளைஞர்களின் ஓட்டுவங்கியும் இல்லாமல் போயிருக்கும் நிலையில் பேரூராட்சி தலைவருக்கு விருது கொடுப்பதால் அந்த சரிவை சமாளிக்கலாம் என்று திமுக நினைத்திருக்கக்கூடும். அதிரை முஸ்லிம்களின் வணக்கஸ்தலத்திற்கு வில்லங்கம் செய்து வந்ததற்கு பாராட்டும் விதமாகவே இந்த விருதை அதிரை முஸ்லிம்கள் பார்க்கிறார்கள். பள்ளிவாசல் விசயத்தில் திமுகவிற்கு அதிரை முஸ்லிம்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்...இன்ஷா அல்லாஹ்...முஸ்லிம் பெயர் தாங்கி கோட்டை அமீர் என்று பெயர் சூட்டி விருது வழங்குவதால், முஸ்லிம் சமுதாயம் மகிழ்ச்சி அடைவதில்லை அவர்களுக்கான உரிமையை சரிவர கொடுப்பது தான் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்று மக்கு ஆட்சியாளர்களுக்கு நினைவுறுத்துகிறோம.உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்.....
சரபுதீன், சுப்பு, சர்மா ( பாகம் - 2 )
காதலும் காமமும் தெறியாத வயதில் அந்தி மாலைப்பொழுதில் மூவரும் வண்டிப்பேட்டை வழியாக சென்றுகொண்டிருக்குபோது நாளை விடுமுறையை எப்படி கழிப்பது என்று விவாதம் திரும்பியது.சர்மாவோ, தனியாக வீட்டில் இருக்க போவதாகவும் அப்பாவும் அம்மாவும் அவரவர் வேலைக்கு போய்விடுவத்தால் தனக்கு போர் அடிக்கும் என்று அலுத்துகொண்டான். சுப்புவுக்கோ சந்தோஷம் காரணம் விடுமுறை நாட்களில் அவன் அப்பாவுடன் வேலைக்கு போவது வழக்கம் அவனுக்கு கையாளுக்கான சம்பளம் கிடைக்கும் அதில் அவனுக்கு மூன்றில் ஒரு பகுதி கிடைக்கும் மேலும் குடும்பத்திற்கும் உதவியாகவும் இருக்கும் என்பதாலும் அவனுக்கு சந்தோஷாம் என்றான்.சரபுதீன் எங்கு போகப்போகிறாய் என்றனர் அவனோ திருச்சிக்கு என்றான் இருவரும் ஆச்சரியபட்டனர், எதற்கு என்று வினவினர் பாஸ்போர்ட் எடுக்க என்றவுடன் மேலும் ஆச்சரியாப்பட்டனர், உனக்கு 16 வயது தானே ஆகின்றது 18 வயது ஆனால் தான் பாஸ்போர்ட் எடுக்கமுடியும் என்றான் சர்மா, அதற்கு அவன் பட்டுக்கோட்டையில் இருக்கும் டிராவல்ஸ் ஏஜென்ட் எடுக்கலாம் என்றிருக்கிறார் என்றான்.சுப்பு கேட்டான் ஏன்டா பரீட்சை லீவில் குடும்பத்துடன் எதும் வெளிநாட்டிற்கு டூர் ஏதும் போகபோகிறீர்களா என்றான், இல்லைடா திருச்சிக்கு போவதற்கே எங்க மாமா பணம் தருகிறார் இதுல எங்க டூர் போறது என்றான், பிறகு ஏன் இவ்வளவு அவசரம் பாஸ்போர்ட் எடுக்க என்றான், போன வாரம் எங்க வாப்பா மெட்ராஸ் போய்ட்டு வந்தங்கள அப்போ அங்க வெளிநாட்டுக்கு ஆள் அனுப்புர நம்மூர் ஏஜெண்ட்ட பார்த்தார்களாம் அவரிடம் குடும்ப கஷ்டங்களை சொல்லிகிட்டு இருக்கும்போது சீக்கிரம் உங்க மகனுக்கு பாஸ்போர்ட் எடுங்க சவுதி நாட்டுக்கு விஷா வரத்து அதிகமாகிட்டு இருக்குது நல்ல கம்பேணி கிடைத்தால் அனுப்பி வைத்துவிடலாம் என்றாரம் அதனால் தான் இவ்வளவு அவசரம் என்றான்.மேலும் எங்க வாப்பவுக்கும் சந்தோஷம் காரணம் வெளிநாட்டிற்கு போக எத்தனையே தடவை முயற்ச்சி செய்தும் அவர்களால் போக முடியவில்லையாம் ஆதால் தன்னால் முடியாத பாக்கியம் தன் மகனுக்காவது கிடைக்கட்டுமே என்று ஆசைப்படுகிறார்கள் என்றான். ஏன்டா படிக்கும் போது வெளிநாட்டுக்கு போகவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் நல்லா படித்துவிட்டு இங்கேயே வேலை கிடைத்து சம்பாதிக்கலாம்புல என்றான் சுப்பு, வண்டிப்பேட்டை பள்ளியில் பாங்கு சொல்லும் சத்தம் கேட்டு மூவரும் வீடு திரும்பலானார்கள் நான் தொழுது விட்டு வீட்டுக்கு போகிறேன் என்று மற்றவர்களிடம் சரபுதீன் விடைப்பெற்றுக்கொண்டான்.மஹ்ரிப் தொழுகை முடிந்தவுடன் வாரந்தோறும் நடைப்பெறும் மார்க்க செற்பொழிவில் கலந்து கொண்டுவிட்டு வாப்பாவும் மகனும் வீடு திரும்பலானார்கள். நளை பாஸ்போர்ட் எடுக்க போகமல் இருக்க வேண்டும் இதைப்பற்றி வாப்பவிடம் பேசவேண்டும் என்ற ஆவாலில் வாப்பாவிடம் கோட்டேவிட்டான் நான் படிக்க வேண்டும் +2 பாஸ் ஆன பிறகு பாஸ்போர்ட் எடுப்பதை பற்றி முடிவு செய்து கொள்ளலாம் என்றவுடன் சவண்ணா காக்கவுக்கு சுர்றென்று கோபம் தலைக்கு ஏறியவராக சத்தம் போட்டுக்கொண்டே வீட்டுக்குள் வந்தார், இவருடை சத்தத்தை கேட்டு அடுப்படியில் மருமகனுக்காக சின்ன வெங்காயத்தை போட்டு ரவா தோசை சுட்டுகிட்டு இருந்த சல்மா ராத்தா அவர்கள் போட்டது போட்டபடி என்னவென்று கூடத்தை நோக்கி வந்தார்கள், ஏன் என்றைக்கும் இல்லாமல் இவ்வள்வு சத்தம் உள்ள மருமவன் இருக்காக மெதுவா பேசக்கூடாத என்றார்கள்.உன் மகன்கிட்யே கேட்டு தெறிந்து கொள் என்று ஒதுங்கி கொண்டார், மகனை நோக்கிய தாய் வாஞ்சையுடன் என்ன நடந்தது என்றார், உம்மா நான் அவசியம் பாஸ்போர்ட் எடுத்துதான் ஆக வேண்டுமா வெளிநாடு போய் தான் ஆக வேண்டுமா என்றவுடன் உம்மாவுக்கும் பகீர் என்று ஆகிவிட்ட்து, காரணம் ஏற்கனவே மூத்த மகளின் கல்யாணத்தை முன்னோர்கள் சேர்த்து வைத்தது குடும்பத்தினர் கொடுத்து உதவியதை வைத்து ஒரு வழியாக முடித்தாகிவிட்டது அடுத்த மகளுக்கோ கல்யாண வயது ஆகிவிட்டது இருந்த ஒரு வீட்டையும் மூத்தமகளுக்கே கொடுத்தவிட்டபடியால் வீடும் கொடுக்கவேண்டும் மகன் இருக்கின்றான் என்ற தைறியத்தில் இருந்தவர்களுக்கு சொலக்கென்று ஆகிவிட்டது (அல்லாஹ்வை மறந்துவிட்டார்கள்) ஒரு விதமாக குடும்பசூழ்நிலையை மகனிடம் சொல்லி அவனை சம்மதிக்க வைத்து விட்டார்கள்.உம்மாவின் சொல்லை கேட்டு மச்சான் சாப்பிட்டுவிட்டு பாக்கி வரும் ரவா தோசைக்காக வாப்பவும் மகனும் காத்திருந்தனர்....................தொடரும்...................................................................................சின்னகாக்கா
புகை பழக்கம்
பத்து நபர்கள் மரணமடைவாரெனின் அதில் ஒருவர் புகையிலையின் பக்கவிளைவினால் மரணமடைகிறார். இதை ஒட்டு மொத்தமாக காண்கையில் ஒரு வருடத்திற்கு 5 கோடி இறப்புகளுக்கு சமமாகும். பெரும்பான்மையான மரணங்கள் மாரடைப்பு, புற்று நோய் மற்றும் சுவாச கோளாருகளால் எற்படுகின்றன. அமெரிக்காவில் மூச்சுக் குழாய் அடைப்பினால் மரணமடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக சமீபத்தய தகவல் ஒன்று தெரிவிக்கிறது.புகை பிடிப்பது மரணத்தை நம் வீட்டின் அடி வாசலுக்கு அழைப்புவிடுக்கும் செயல் என்பார்கள். புகை பிடிக்கும் பழக்கமானது புகைப்பவனை மட்டுமல்லாது அவனைச் சூழ்ந்து இருப்பவரையும் பாதிக்கிறது. உறிஞ்சப்படும் புகை புகைப்பவனின் இருதயம், சுவாசப்பை மற்றும் மூளை போன்ற அங்கங்களை பாதிக்கிறது.ஒரு வெண்சுருட்டில் அடங்கியுள்ள தார், நிக்கோடின், மற்றும் பல இரசாயன பொருட்களின் கலவை புற்று நோய், டீபி, மூளையில் இரத்தம் கசியச் செய்தல் என பல நோய்களை உண்டாக்கின்றன.உறிஞ்சப்படும் புகையில் 4000 இரசாயனப் பொருட்களும் அவற்றுள் 200 விஷ இரசாயனங்களும் உள்ளன. மேலும் 43 வகை இரசாயனங்கள் புற்றுநோயை உண்டு பண்ணுபவை. வெளியேற்றப்பட்ட சிகரட்டு புகையை சுவாசிப்பவர்களுக்கு பக்க வாத நோய் ஏற்பட சாத்தியங்கள் அதிகம். பக்கவாத நோய் ஒருவரின் பார்வையிழக்கச் செய்யலாம், உடல் உறுப்புகளின் செயல்பாட்டை பாதிப்படையச் செய்யலாம், உயிரைக் கூட குடித்துவிடலாம்.புகை பழக்கம் கொண்ட கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளில் சராசரியாக 1 முதல் 10 சிகரட்டுகள் புகைப்பாராயின் அவர்களில் 29 சதவிகிதத்தனரின் சிசுக்கள் ஊனமாய் பிறக்கிறது. இதை தவிர்த்து புகைக்கும் பழக்கம் ஒருவரின் பணத்தையும் பாழ்படுத்துகிறது என்பது நாம் அறிந்த விடயமாகும்.கடந்த நான்கு நூற்றாண்டுகளாக புகை பழக்கத்தின் பாதிப்புகள் சரிவர அறியாமலே இருந்தது. ஆதலால் புகை பிடிப்பதின் பக்கவிளைவுகளும் கட்டுபாடின்றி வளர்ந்து கொண்டே இருந்தது. புகையிலையின் பக்க விளைவுகளை உணர்த்தும் நோக்கில் விழிப்புணர்வு பட்டரைகளும் விளம்பரங்களும் அதிகரிக்கப்பட்டன. ஆனால் புகைப்பவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. புகைப்பவரிடையே உண்டாகும் புற்றுநோயும், மாரடைப்பும் பிரிட்டனில் ஏற்படும் 30% மரணத்திற்கு முக்கிய காரணமாய் அமைக்கிறது.புகை பழக்கத்தை விடுவோமேயானல் அதன் பலன்கள் ஐந்து வருடத்தில் நம்மால் உணர முடியும் என்கிறது ஒரு தகவல்.புகைக்கும் பழக்கம் ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும். உடலுறவில் அதிருப்தியும் சுக்கில உற்பத்தியும் குறைந்து போகும். ஒரு ஆய்வின்படி புகைபிடிக்கும் ஆண்களில் 30-40 வயதிற்குட்பட்ட 50 சதவிகிதத்தினருக்கு ஆண்மை வீரியம் குறைந்து காணப்படுவதாகக் கூறப்படுகிறது. புகை பழக்கம் கொண்டவர்கள் விரைவாகவே முதுமைத் தன்மையோடுக் காட்சியளிப்பார்கள். இது புகை பிடிக்காதவரைக் காட்டினும் ஆண்களுக்கு 2 மடங்கும் பெண்களுக்கு 3 மடங்கும் ஒப்பானதாகும். இதற்கு என்ன காரணம்? சிகரட்டு புகை நம் உடலில் காணப்படும் A வகை விட்டமினைக் குறைக்கும். விட்டமின் A நமது தோல் பாதுகாப்பிற்குடையதாகும். இவ்விட்டமின் குறைவினால் இயல்பான வயதை விட முதுமை தோன்றமே முந்தி நின்று காட்சி அளிக்கும். புகையிலையில் காணப்படும் Acetyldehdye எனப்படும் இரசாயனம் நமது உடலில் காணப்படும் C வகை விட்டமீன்களை குறைத்துவிடும் தன்மையைக் கொண்டது. ஒரு துண்டு சிகரட்டு புகைப்பவரின் உடலில் காணப்படும் 20மில்லிகிராம் C வகை வைட்டமின்களை அழிக்கிறது.ஒரு சிகரட்டின் 15% பாதிப்பு புகைப்பவரையும் 85% பாதிப்பு சிகரட்டிலிருந்து வெளியேறும் புகைவழியே சுற்றதாரையும் பாதிக்கிறது. அதாவது புகை உறுஞ்சுபவரை காட்டினும் அவரை சுற்றி இருப்பவருக்கே பாதிப்புகள் பல மடங்கு அதிகமாக உள்ளது. முக்கியமாக குழந்தைகள் பெரியவர்களை காட்டினும் விரைவாக சுவாசிப்பார்கள், அப்படி சுவாசிக்கப்படுபவர்கள் இளம் பிராயத்திலேயே பாதிப்படைகிறார்கள், நோய்க்குற்படுகிறார்கள்.70 கோடி சிறார்கள் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்களின் வீடுகளில் வாழ்வதாக குறிப்பிடுகிறார்கள். சிகரட்டு புகை, சிறார்களின் உடல் மற்றும் சிந்தனை வளர்ச்சியை பாதிக்கக் கூடியது. அமேரிக்க ஆய்வறிக்கை ஒன்று மிதமான சிகரட்டு புகையில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கிடையே நடத்தப்பட ஆய்வின்படி அவர்களிடையே படிக்கும் மற்றும் சிந்திக்கும் திறன் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக காட்டுகிறது.புகை பழக்கம் கொண்டவர்கள் முள்ளங்கி ரசம் உட்கொள்ளும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் புகை பழக்கத்தில் இருந்து விடுபட வாய்ப்புகள் அதிகம் உள்ளதென ஒரு தகவல் விளக்கம் கொடுக்கிறது. சீரிய வாழ்விற்கு புகை பிடிக்காதிருப்போம்
சரபுதீன், சுப்பு, சர்மா ( பாகம் - 2 )
Posted: 03 Feb 2009 07:42 AM CST
காதலும் காமமும் தெறியாத வயதில் அந்தி மாலைப்பொழுதில் மூவரும் வண்டிப்பேட்டை வழியாக சென்றுகொண்டிருக்குபோது நாளை விடுமுறையை எப்படி கழிப்பது என்று விவாதம் திரும்பியது.சர்மாவோ, தனியாக வீட்டில் இருக்க போவதாகவும் அப்பாவும் அம்மாவும் அவரவர் வேலைக்கு போய்விடுவத்தால் தனக்கு போர் அடிக்கும் என்று அலுத்துகொண்டான். சுப்புவுக்கோ சந்தோஷம் காரணம் விடுமுறை நாட்களில் அவன் அப்பாவுடன் வேலைக்கு போவது வழக்கம் அவனுக்கு கையாளுக்கான சம்பளம் கிடைக்கும் அதில் அவனுக்கு மூன்றில் ஒரு பகுதி கிடைக்கும் மேலும் குடும்பத்திற்கும் உதவியாகவும் இருக்கும் என்பதாலும் அவனுக்கு சந்தோஷாம் என்றான்.சரபுதீன் எங்கு போகப்போகிறாய் என்றனர் அவனோ திருச்சிக்கு என்றான் இருவரும் ஆச்சரியபட்டனர், எதற்கு என்று வினவினர் பாஸ்போர்ட் எடுக்க என்றவுடன் மேலும் ஆச்சரியாப்பட்டனர், உனக்கு 16 வயது தானே ஆகின்றது 18 வயது ஆனால் தான் பாஸ்போர்ட் எடுக்கமுடியும் என்றான் சர்மா, அதற்கு அவன் பட்டுக்கோட்டையில் இருக்கும் டிராவல்ஸ் ஏஜென்ட் எடுக்கலாம் என்றிருக்கிறார் என்றான்.சுப்பு கேட்டான் ஏன்டா பரீட்சை லீவில் குடும்பத்துடன் எதும் வெளிநாட்டிற்கு டூர் ஏதும் போகபோகிறீர்களா என்றான், இல்லைடா திருச்சிக்கு போவதற்கே எங்க மாமா பணம் தருகிறார் இதுல எங்க டூர் போறது என்றான், பிறகு ஏன் இவ்வளவு அவசரம் பாஸ்போர்ட் எடுக்க என்றான், போன வாரம் எங்க வாப்பா மெட்ராஸ் போய்ட்டு வந்தங்கள அப்போ அங்க வெளிநாட்டுக்கு ஆள் அனுப்புர நம்மூர் ஏஜெண்ட்ட பார்த்தார்களாம் அவரிடம் குடும்ப கஷ்டங்களை சொல்லிகிட்டு இருக்கும்போது சீக்கிரம் உங்க மகனுக்கு பாஸ்போர்ட் எடுங்க சவுதி நாட்டுக்கு விஷா வரத்து அதிகமாகிட்டு இருக்குது நல்ல கம்பேணி கிடைத்தால் அனுப்பி வைத்துவிடலாம் என்றாரம் அதனால் தான் இவ்வளவு அவசரம் என்றான்.மேலும் எங்க வாப்பவுக்கும் சந்தோஷம் காரணம் வெளிநாட்டிற்கு போக எத்தனையே தடவை முயற்ச்சி செய்தும் அவர்களால் போக முடியவில்லையாம் ஆதால் தன்னால் முடியாத பாக்கியம் தன் மகனுக்காவது கிடைக்கட்டுமே என்று ஆசைப்படுகிறார்கள் என்றான். ஏன்டா படிக்கும் போது வெளிநாட்டுக்கு போகவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் நல்லா படித்துவிட்டு இங்கேயே வேலை கிடைத்து சம்பாதிக்கலாம்புல என்றான் சுப்பு, வண்டிப்பேட்டை பள்ளியில் பாங்கு சொல்லும் சத்தம் கேட்டு மூவரும் வீடு திரும்பலானார்கள் நான் தொழுது விட்டு வீட்டுக்கு போகிறேன் என்று மற்றவர்களிடம் சரபுதீன் விடைப்பெற்றுக்கொண்டான்.மஹ்ரிப் தொழுகை முடிந்தவுடன் வாரந்தோறும் நடைப்பெறும் மார்க்க செற்பொழிவில் கலந்து கொண்டுவிட்டு வாப்பாவும் மகனும் வீடு திரும்பலானார்கள். நளை பாஸ்போர்ட் எடுக்க போகமல் இருக்க வேண்டும் இதைப்பற்றி வாப்பவிடம் பேசவேண்டும் என்ற ஆவாலில் வாப்பாவிடம் கோட்டேவிட்டான் நான் படிக்க வேண்டும் +2 பாஸ் ஆன பிறகு பாஸ்போர்ட் எடுப்பதை பற்றி முடிவு செய்து கொள்ளலாம் என்றவுடன் சவண்ணா காக்கவுக்கு சுர்றென்று கோபம் தலைக்கு ஏறியவராக சத்தம் போட்டுக்கொண்டே வீட்டுக்குள் வந்தார், இவருடை சத்தத்தை கேட்டு அடுப்படியில் மருமகனுக்காக சின்ன வெங்காயத்தை போட்டு ரவா தோசை சுட்டுகிட்டு இருந்த சல்மா ராத்தா அவர்கள் போட்டது போட்டபடி என்னவென்று கூடத்தை நோக்கி வந்தார்கள், ஏன் என்றைக்கும் இல்லாமல் இவ்வள்வு சத்தம் உள்ள மருமவன் இருக்காக மெதுவா பேசக்கூடாத என்றார்கள்.உன் மகன்கிட்யே கேட்டு தெறிந்து கொள் என்று ஒதுங்கி கொண்டார், மகனை நோக்கிய தாய் வாஞ்சையுடன் என்ன நடந்தது என்றார், உம்மா நான் அவசியம் பாஸ்போர்ட் எடுத்துதான் ஆக வேண்டுமா வெளிநாடு போய் தான் ஆக வேண்டுமா என்றவுடன் உம்மாவுக்கும் பகீர் என்று ஆகிவிட்ட்து, காரணம் ஏற்கனவே மூத்த மகளின் கல்யாணத்தை முன்னோர்கள் சேர்த்து வைத்தது குடும்பத்தினர் கொடுத்து உதவியதை வைத்து ஒரு வழியாக முடித்தாகிவிட்டது அடுத்த மகளுக்கோ கல்யாண வயது ஆகிவிட்டது இருந்த ஒரு வீட்டையும் மூத்தமகளுக்கே கொடுத்தவிட்டபடியால் வீடும் கொடுக்கவேண்டும் மகன் இருக்கின்றான் என்ற தைறியத்தில் இருந்தவர்களுக்கு சொலக்கென்று ஆகிவிட்டது (அல்லாஹ்வை மறந்துவிட்டார்கள்) ஒரு விதமாக குடும்பசூழ்நிலையை மகனிடம் சொல்லி அவனை சம்மதிக்க வைத்து விட்டார்கள்.உம்மாவின் சொல்லை கேட்டு மச்சான் சாப்பிட்டுவிட்டு பாக்கி வரும் ரவா தோசைக்காக வாப்பவும் மகனும் காத்திருந்தனர்....................தொடரும்...................................................................................சின்னகாக்கா
புகை பழக்கம்
Posted: 03 Feb 2009 05:36 AM CST
பத்து நபர்கள் மரணமடைவாரெனின் அதில் ஒருவர் புகையிலையின் பக்கவிளைவினால் மரணமடைகிறார். இதை ஒட்டு மொத்தமாக காண்கையில் ஒரு வருடத்திற்கு 5 கோடி இறப்புகளுக்கு சமமாகும். பெரும்பான்மையான மரணங்கள் மாரடைப்பு, புற்று நோய் மற்றும் சுவாச கோளாருகளால் எற்படுகின்றன. அமெரிக்காவில் மூச்சுக் குழாய் அடைப்பினால் மரணமடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக சமீபத்தய தகவல் ஒன்று தெரிவிக்கிறது.புகை பிடிப்பது மரணத்தை நம் வீட்டின் அடி வாசலுக்கு அழைப்புவிடுக்கும் செயல் என்பார்கள். புகை பிடிக்கும் பழக்கமானது புகைப்பவனை மட்டுமல்லாது அவனைச் சூழ்ந்து இருப்பவரையும் பாதிக்கிறது. உறிஞ்சப்படும் புகை புகைப்பவனின் இருதயம், சுவாசப்பை மற்றும் மூளை போன்ற அங்கங்களை பாதிக்கிறது.ஒரு வெண்சுருட்டில் அடங்கியுள்ள தார், நிக்கோடின், மற்றும் பல இரசாயன பொருட்களின் கலவை புற்று நோய், டீபி, மூளையில் இரத்தம் கசியச் செய்தல் என பல நோய்களை உண்டாக்கின்றன.உறிஞ்சப்படும் புகையில் 4000 இரசாயனப் பொருட்களும் அவற்றுள் 200 விஷ இரசாயனங்களும் உள்ளன. மேலும் 43 வகை இரசாயனங்கள் புற்றுநோயை உண்டு பண்ணுபவை. வெளியேற்றப்பட்ட சிகரட்டு புகையை சுவாசிப்பவர்களுக்கு பக்க வாத நோய் ஏற்பட சாத்தியங்கள் அதிகம். பக்கவாத நோய் ஒருவரின் பார்வையிழக்கச் செய்யலாம், உடல் உறுப்புகளின் செயல்பாட்டை பாதிப்படையச் செய்யலாம், உயிரைக் கூட குடித்துவிடலாம்.புகை பழக்கம் கொண்ட கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளில் சராசரியாக 1 முதல் 10 சிகரட்டுகள் புகைப்பாராயின் அவர்களில் 29 சதவிகிதத்தனரின் சிசுக்கள் ஊனமாய் பிறக்கிறது. இதை தவிர்த்து புகைக்கும் பழக்கம் ஒருவரின் பணத்தையும் பாழ்படுத்துகிறது என்பது நாம் அறிந்த விடயமாகும்.கடந்த நான்கு நூற்றாண்டுகளாக புகை பழக்கத்தின் பாதிப்புகள் சரிவர அறியாமலே இருந்தது. ஆதலால் புகை பிடிப்பதின் பக்கவிளைவுகளும் கட்டுபாடின்றி வளர்ந்து கொண்டே இருந்தது. புகையிலையின் பக்க விளைவுகளை உணர்த்தும் நோக்கில் விழிப்புணர்வு பட்டரைகளும் விளம்பரங்களும் அதிகரிக்கப்பட்டன. ஆனால் புகைப்பவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. புகைப்பவரிடையே உண்டாகும் புற்றுநோயும், மாரடைப்பும் பிரிட்டனில் ஏற்படும் 30% மரணத்திற்கு முக்கிய காரணமாய் அமைக்கிறது.புகை பழக்கத்தை விடுவோமேயானல் அதன் பலன்கள் ஐந்து வருடத்தில் நம்மால் உணர முடியும் என்கிறது ஒரு தகவல்.புகைக்கும் பழக்கம் ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும். உடலுறவில் அதிருப்தியும் சுக்கில உற்பத்தியும் குறைந்து போகும். ஒரு ஆய்வின்படி புகைபிடிக்கும் ஆண்களில் 30-40 வயதிற்குட்பட்ட 50 சதவிகிதத்தினருக்கு ஆண்மை வீரியம் குறைந்து காணப்படுவதாகக் கூறப்படுகிறது. புகை பழக்கம் கொண்டவர்கள் விரைவாகவே முதுமைத் தன்மையோடுக் காட்சியளிப்பார்கள். இது புகை பிடிக்காதவரைக் காட்டினும் ஆண்களுக்கு 2 மடங்கும் பெண்களுக்கு 3 மடங்கும் ஒப்பானதாகும். இதற்கு என்ன காரணம்? சிகரட்டு புகை நம் உடலில் காணப்படும் A வகை விட்டமினைக் குறைக்கும். விட்டமின் A நமது தோல் பாதுகாப்பிற்குடையதாகும். இவ்விட்டமின் குறைவினால் இயல்பான வயதை விட முதுமை தோன்றமே முந்தி நின்று காட்சி அளிக்கும். புகையிலையில் காணப்படும் Acetyldehdye எனப்படும் இரசாயனம் நமது உடலில் காணப்படும் C வகை விட்டமீன்களை குறைத்துவிடும் தன்மையைக் கொண்டது. ஒரு துண்டு சிகரட்டு புகைப்பவரின் உடலில் காணப்படும் 20மில்லிகிராம் C வகை வைட்டமின்களை அழிக்கிறது.ஒரு சிகரட்டின் 15% பாதிப்பு புகைப்பவரையும் 85% பாதிப்பு சிகரட்டிலிருந்து வெளியேறும் புகைவழியே சுற்றதாரையும் பாதிக்கிறது. அதாவது புகை உறுஞ்சுபவரை காட்டினும் அவரை சுற்றி இருப்பவருக்கே பாதிப்புகள் பல மடங்கு அதிகமாக உள்ளது. முக்கியமாக குழந்தைகள் பெரியவர்களை காட்டினும் விரைவாக சுவாசிப்பார்கள், அப்படி சுவாசிக்கப்படுபவர்கள் இளம் பிராயத்திலேயே பாதிப்படைகிறார்கள், நோய்க்குற்படுகிறார்கள்.70 கோடி சிறார்கள் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்களின் வீடுகளில் வாழ்வதாக குறிப்பிடுகிறார்கள். சிகரட்டு புகை, சிறார்களின் உடல் மற்றும் சிந்தனை வளர்ச்சியை பாதிக்கக் கூடியது. அமேரிக்க ஆய்வறிக்கை ஒன்று மிதமான சிகரட்டு புகையில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கிடையே நடத்தப்பட ஆய்வின்படி அவர்களிடையே படிக்கும் மற்றும் சிந்திக்கும் திறன் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக காட்டுகிறது.புகை பழக்கம் கொண்டவர்கள் முள்ளங்கி ரசம் உட்கொள்ளும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் புகை பழக்கத்தில் இருந்து விடுபட வாய்ப்புகள் அதிகம் உள்ளதென ஒரு தகவல் விளக்கம் கொடுக்கிறது. சீரிய வாழ்விற்கு புகை பிடிக்காதிருப்போம்

இமாம் சாபி பள்ளி தடம் மாறுகிறதா?

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் இமாம் ஷாஃபி [ரஹ்] மெட்ரிகுலேசன் பள்ளி,அதிரையின் முதல் ஆங்கிலவழி பாடசாலை. மார்க்கப் பின்னணியுடன் கூடிய ஆங்கில வழிக் கல்விக்கூடம் சுற்றுவட்டார நகரங்களிலேயே அதிரையில்தான் தொடங்கப்பட்டது. இப்படியாக முப்பது வருடப்பாரம்பர்யம் கொண்ட இப்பள்ளியின் சமீப வருட அணுகுமுறைகள் பள்ளிக்கு அவப்பெயரை உண்டாக்கிவிடுமோ என நினைக்கத் தோன்றுகிறதுஇரு வருடங்களுக்கு முன்பு பதினொன்றாம் வகுப்புப் படிக்கும் ஹாஜாநகர் மாணவனை மாணவியர் முன்னிலையில் கன்னத்தில் அறைந்து அவமதித்த ஆசிரியரை மாணவன் திருப்பி அடித்தான். பள்ளி மாணவர்களை அடிக்கும் அரக்கத்தனம் அநாகரிகமாகக் கருதப்படுகிறது. பதின்ம வயதின் (டீனேஜ்) காரணமாக உடலளவிலும் மனதளவிலும் எழும் உடலியல்/உளவியல் மாற்றங்களைக் கருத்தில் கொள்ளாது பலர்முன்பு அவமானப் படுத்தப்பட்டதோடு பள்ளியை விட்டும் நீக்கப்பட்டான். வெளிநாட்டில் இருந்த பெற்றோர் மன்னிப்புக் கேட்டும் பொருட்படுத்தாமல் பதினொன்றாம் வகுப்பின் இறுதிக் கட்டத்தில் இருந்த மாணவனை பள்ளியைவிட்டு நீக்கி இமாம் ஷாஃபி பள்ளி நிர்வாகம் தனது பக்குவமின்மையைக் காட்டியது.பத்தாம் வகுப்பு மாணவியொருவர், பார்டர் மதிப்பெண்களில் தேர்ச்சியடடந்த காரணத்தால், மேற்கொண்டு பள்ளியில் படிப்பைத் தொடர முடியாதென்று சொன்னதோடு, காதிர் முஹைதீன் பெண்கள் பள்ளிக்கு மாற்றுதல் வாங்சிச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டார். மாணவியும் பெற்றோரும் தங்கள் மகள் கடந்த 10-12 வருடங்களாகப் படித்த இமாம் ஷாஃபி பள்ளியிலேயே தொடர அனுமதிக்க வேண்டினர். மிகுந்த கோரிக்கைக்குப் பின்னர், பள்ளி நிர்வாகம் மாணவியை அதே பள்ளியில் படிக்க அனுமதித்தனர்.இங்கு விமர்சிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், இமாம் ஷாஃபி பள்ளியின் எதிர்காலத் திட்டங்களில் ஒன்றாக நமதூரில் பெண்கள் கல்லூரி தொடங்குவதும் உள்ளது. தங்கள் பள்ளியில் படித்த மாணவிக்கு மேற்படிப்பு படிக்க அனுமதிக்காவிடில் எப்படி கல்லூரிக்கு மாணவியர் கிடைப்பார்கள் என உணரவில்லை. மேலும், 10-12 வருடங்கள் பள்ளியில் படித்த மாணவியின் குறைவான மதிப்பெண்ணுக்கு குற்றஞ்சாட்டப்பட வேண்டியவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களும்தான் என்பதைக் கவனத்தில் கொள்ள மறந்தார்கள்.சமீபத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் ஒருவரை தவறுதலாக வெற்று குறுஞ்செய்தி (EMPTY SMS) அனுப்பிய காரணத்திற்காக ஆயுவுக்கூடத்திற்கு அழைத்து அடித்துத் துன்புறுத்திய ஆசிரியர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், பாதிக்கப்பட்ட மாணவனை 15 நாட்கள் சஸ்பெண்ட் செய்ததைக் கண்டித்து நமதூர் மாணவர்கள் அமைப்பினர் கொதித்தெழுந்தனர். மாணவன் பக்கம் குற்றமில்லை என்பது நிரூபனமான பின்பும்கூட, பாதிக்கப்பட்ட மாணவனை பதினைந்து நாட்கள் சஸ்பெண்ட் செய்து தண்டித்தது எந்த வகையான நீதி என்று தெரியவில்லை. ஆசிரியரின் அநாகரிகத்தைக் கண்டு கொள்ளாது தண்டிக்கப்பட்ட மாணவன், நீதிமன்றம் சென்று நியாயம் கேட்ட பிறகும் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.மாணவனைத் தாக்கிய ஆசிரியர்களில் ஒருவர் தாமாகவே ராஜினாமா செய்துள்ளார். மற்றொருவர் உதவித் தலைமையாசிரியர் நிலையில் இருப்பதால் நிர்வாக ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டு வழக்கு வாபஸ் பெற வைக்கப்பட்டுள்ளது.நல்லெண்ணம் கொண்டவர்களால் நீண்டகாலக் கண்ணோட்டத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இமாம் ஷாஃபி பள்ளியின் சமீபகால அணுகு முறைகள் நெறி தவறுவதற்கு யார் காரணம்?பள்ளிகளில் கட்டுப்பாட்டைப் போதிக்க வேண்டிய ஆசிரியர்கள் நிதானம் இழப்பது மாணவர்களின் எதிர்காலத்திற்கு நல்லதா? பாதிக்கப்பட்டவர்கள் படிப்பைப் பாதியில் நிறுத்தினால் நஷ்டத்திற்கு யார் பொறுப்பு?தங்கள் பிள்ளைகள் ஆங்கில வழிக்கல்வி பயின்றால் எதிர்காலத்தில் நல்ல நிலை அடைவார்கள் என்ற நம்பிக்கையில், இமாம் ஷாஃபி பள்ளியின்மீது நம்பிக்கை வைத்த பெற்றோர்களுக்குப் பள்ளி நிர்வாகம் என்ன வகையான உத்தரவாதத்தைக் கொடுக்கப்போகிறார்கள்?இக்கால கட்டத்தில் மார்க்கக்கல்வியும் உலகக் கல்வியும் ஒருங்கே பெற்ற பள்ளிகள் சொற்பளவே உள்ளன. சிறுபான்மையினர் நிறைந்துள்ள அதிரை போன்ற சிற்றூர்களில் அரசாங்கம் அல்லது வர்த்தக ரீதியில் யாரும் இது போல் கல்விச்சேவை செய்ய முன் வரமாட்டார்கள். 30 வருடப்பாரம்பர்யம், பெற்றோரின் நன்மதிப்பு இவற்றை ஒருசில ஆசிரியர்களின் நடவடிக்கை காரணமாக இமாம் ஷாஃபி இழந்து விடக்கூடாது என்ற ஆதங்கத்திற்குப் பள்ளி நிர்வாகம் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?
இஸ்லாம் பார்வையில்"இரத்த பந்தம்"
Posted: 03 Feb 2009 07:25 PM CST
அபூ அய்யூப் அன்சாரி رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! என்னை சுவனத்தினுள் நுழையச் செய்யும் ஒர் அமலை எனக்கு அறிவியுங்கள்'' என்று கூறினார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், ""நீர் அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு எந்த ஒன்றையும் இணைவைக்காதிருப்பது, தொழுகையை நிலை நாட்டுவது, ஜகாத்தை கொடுத்து வருவது மற்றும் இரத்த பந்துக்களோடு இணைந்திருப்பது'' என்று கூறினார்கள். (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிப்பதாவது, நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ""எவர் தன்னுடைய இரணம் விசாலமாக்கப்பட வேண்டுமெனவும், ஆயுள் நீளமாக்கப்பட வேண்டுமெனவும் விரும்புகிறாரோ அவர் தனது இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழட்டும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறுகிறார்கள்: ""தனது இரட்சகனை அஞ்சி, இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழ்பவருடைய ஆயுள் நீளமாக்கப்படும், செல்வங்கள் பெருகும், அவரை அவரது குடும்பத்தினர் நேசிப்பார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்) நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "ஒரு கூட்டத்தில் உறவுகளைத் துண்டித்து வாழ்பவன் இருந்தால் அந்தச் சமுதாயத்தினர் மீது அல்லாஹ்வின் அருள் இறங்காது.'' (ஷு"ஃ புல் ஈமான் அல் பைஹகீ)நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ""மறு உலகில் அல்லாஹ் தண்டிப்பதுடன் இவ்வுலகிலும் தண்டனை தருவதற்கு மிகத் தகுதியான குற்றம் உறவுகளைத் துண்டிப்பதை விடவும், அக்கிரமம் செய்வதை விடவும் வேறொன்றுமில்லை.'' (ஸுனன் அபூதாவூத், ஸுனனுத் திர்மிதி, முஸ்னத் அஹ்மத்)அல்லாஹ் அருளியதாக நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ""நானே ரஹ்மான். நான் "ரஹிமை' (இரத்த பந்தத்தை)ப் படைத்தேன். அதற்குரிய பெயரை எனது பெயரிலிருந்து எடுத்தேன். யார் அதைச் சேர்த்துக் கொள்கிறார்களோ நானும் அவர்களைச் சேர்த்துக் கொள்கிறேன். எவர் அதைத் துண்டிக்கிறாரோ அவரை நானும் துண்டித்து விடுகிறேன்.'' (ஸுனன் அபூதாவூத்)ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் மிக அழகிய முறையில் நடந்து கொள்ள மிகவும் தகுதி பெற்றவர் யார்?'' என்று கேட்டார். நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "உமது தாய், பின்பும் உமது தாய், பின்பும் உமது தாய், பிறகு உமது தந்தை, அதற்குப் பிறகு உமக்கு மிக நெருக்கமாக இருப்பவர், அடுத்து உமக்கு நெருக்கமாக இருப்பவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)ஆம்ரு இப்னு ஆஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிப்பதாவது: ""இன்ன குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என் நேசர்கள் அல்லர். என் நேசர்கள் யாரெனில், அல்லாஹ்வும் நல்ல இறை நம்பிக்கையாளர்களும்தான். ஆயினும் அக்குடும்பத்தாருடன் எனக்கு இரத்த பந்தம் உண்டு. அதை நான் உபகாரத்தால் பசுமையாக்குவேன்'' என நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒளிவு மறைவின்றி பகிரங்கமாகவே கூறினார்கள். (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கூறினார்: ""அல்லாஹ்வின் தூதரே! எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றனர். நான் அவர்களுடன் இணைந்திருக்கின்றேன். அவர்கள் என்னைத் துண்டித்து வாழ்கின்றனர். நான் அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன், அவர்கள் எனக்கு தீங்கிழைக்கின்றனர். அவர்களுடன் அறிவார்ந்த முறையில் நடந்து கொள்கிறேன், அவர்கள் என்னுடன் மூடத்தனமாக நடந்து கொள்கின்றனர்'' என்று கூறினார். அதற்கு நபி صلى الله عليه وسلم கூறினார்கள்: ""நீ சொல்வது போலவே நீ நடந்து கொண்டிருந்தால் அவர்களைச் சுடும் சாம்பலை சாப்பிட வைத்தவனாவாய். நீர் அதே நிலையில் இருக்கும் காலமெல்லாம் அவர்களுக்கு எதிராக அல்லாஹ்வின் உதவி உமக்கு நீங்காதிருக்கும்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)