Sunday, March 8, 2009

ஆடு ஒட்டி வந்த கணவன் மிதும் ஆடுகள் மிதும் லாரி மோதல்







ஆடுகளை ஓட்டி வந்த கணவன், மனைவி கண் முன்னே லாரியில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.19 ஆடுகளும் துடிதுடித்து செத்தன. அதிராம்பட்டினம் அருகே நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்த பெரும்மச்சேரி கீழத்தெருவைச் சேர்ந்தவர், ராமு. இவருடைய மகன் கண்ணன் (வயது 35). கண்ணனின் மனைவி அழகம்மாள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.கண்ணனும், அவருடைய மனைவியும் ஊர் ஊராகச் சென்று ஆடுகளை மேய்ப்பது வழக்கம். இவர்கள் வழக்கம் போல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆடுகளை மேய்ப்பதற்காக வீட்டை விட்டு புறப்பட்டனர்.இரவு 11.30 மணியளவில் ஆடுகளை ஓட்டிக்கொண்டு அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி கண்ணன் மீதும், ஆடுகள் மீதும் மோதியது. இதில் மனைவி கண் முன்னேயே கண்ணன் பரிதாபமாக செத்தார். 19 ஆடுகளும் துடிதுடித்து செத்தன.விபத்துக்கு காரணமான லாரி நிற்காமல் சென்றுவிட்டது. இது குறித்து அழகம்மாள் அதிராம்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வம் சம்பவ இடத்தை பார்வையிட்டார். விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Friday, March 6, 2009