Friday, May 8, 2009

அதிரைமக்கள் இலவசமாகக் கொடுத்த நிலத்தில்தான் அரசு பொதுமருத்துவமனை, காவல் நிலையம்,பேரூந்து நிலையம்,மின்நிலையம் ஆகிய அரசு அலுவங்களும் செயல்பட்டு வருகின்றன.ஆனால்,நாங்கள் கிரயம் செய்து வாங்கிய நிலத்தில் தொழுவதற்காகக் பள்ளி கட்டுவதற்குத் தடையாகவும் இவர்களே தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்கள் என்பது தொகுதி எம்.எல்.ஏ ஆக இருக்கும் உங்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

ஆகவே விரைவில் கவிழப்போகும் மைனாரிட்டி அரசு தருவதாச் சொல்லும் தொலைக்காட்சிப் பெட்டியைவிட இறைவனைத் தொழுவதற்கு பள்ளிவாசலே எங்களின் உடனடித்தேவை என்பதை உங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

அஸ்ஸலமு அழைக்கும் மரண அறிவிப்பு

மரண அறிவித்தல்!


அதிராம்பட்டினம் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த ஜனாப் சாகுல் ஹமீத் (காண்ட்ராக்டர்)அவர்கள் இந்திய நேரம் இரவு 12.45 மணி அளவில் வபாஅத்தாகிவிட்டார்கள்.இன் னாலில்லாஹி வ இன்னா
இலைஹி ராஜிவூன்.

அன்னார் அவர்கள், சகோதரர்கள் சரபுதீன், கமாலுதீன்,தாஜுதீன்,நஜ்முதீன் ஆகியோரின் தந்தையும்,டாக்டர் ஹனீப் அவர்களின் மச்சானும் ஆவார்கள்.

அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் துவா செய்வோமாக

Saturday, May 2, 2009

இந்த உலகில இலிஉ???

பெற்றோரைக் கொடுமைபடுத்தியதற்காகத்தரப்படும் தண்டனை மரணத்திற்குமுன் இவ்வுலகிலேயே துரிதமாகத் தரப்பட்டுவிடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) நூல்: பைஹகீ