Saturday, February 7, 2009

சரபுதீன், சுப்பு, சர்மா ( பாகம் - 2 )
Posted: 03 Feb 2009 07:42 AM CST
காதலும் காமமும் தெறியாத வயதில் அந்தி மாலைப்பொழுதில் மூவரும் வண்டிப்பேட்டை வழியாக சென்றுகொண்டிருக்குபோது நாளை விடுமுறையை எப்படி கழிப்பது என்று விவாதம் திரும்பியது.சர்மாவோ, தனியாக வீட்டில் இருக்க போவதாகவும் அப்பாவும் அம்மாவும் அவரவர் வேலைக்கு போய்விடுவத்தால் தனக்கு போர் அடிக்கும் என்று அலுத்துகொண்டான். சுப்புவுக்கோ சந்தோஷம் காரணம் விடுமுறை நாட்களில் அவன் அப்பாவுடன் வேலைக்கு போவது வழக்கம் அவனுக்கு கையாளுக்கான சம்பளம் கிடைக்கும் அதில் அவனுக்கு மூன்றில் ஒரு பகுதி கிடைக்கும் மேலும் குடும்பத்திற்கும் உதவியாகவும் இருக்கும் என்பதாலும் அவனுக்கு சந்தோஷாம் என்றான்.சரபுதீன் எங்கு போகப்போகிறாய் என்றனர் அவனோ திருச்சிக்கு என்றான் இருவரும் ஆச்சரியபட்டனர், எதற்கு என்று வினவினர் பாஸ்போர்ட் எடுக்க என்றவுடன் மேலும் ஆச்சரியாப்பட்டனர், உனக்கு 16 வயது தானே ஆகின்றது 18 வயது ஆனால் தான் பாஸ்போர்ட் எடுக்கமுடியும் என்றான் சர்மா, அதற்கு அவன் பட்டுக்கோட்டையில் இருக்கும் டிராவல்ஸ் ஏஜென்ட் எடுக்கலாம் என்றிருக்கிறார் என்றான்.சுப்பு கேட்டான் ஏன்டா பரீட்சை லீவில் குடும்பத்துடன் எதும் வெளிநாட்டிற்கு டூர் ஏதும் போகபோகிறீர்களா என்றான், இல்லைடா திருச்சிக்கு போவதற்கே எங்க மாமா பணம் தருகிறார் இதுல எங்க டூர் போறது என்றான், பிறகு ஏன் இவ்வளவு அவசரம் பாஸ்போர்ட் எடுக்க என்றான், போன வாரம் எங்க வாப்பா மெட்ராஸ் போய்ட்டு வந்தங்கள அப்போ அங்க வெளிநாட்டுக்கு ஆள் அனுப்புர நம்மூர் ஏஜெண்ட்ட பார்த்தார்களாம் அவரிடம் குடும்ப கஷ்டங்களை சொல்லிகிட்டு இருக்கும்போது சீக்கிரம் உங்க மகனுக்கு பாஸ்போர்ட் எடுங்க சவுதி நாட்டுக்கு விஷா வரத்து அதிகமாகிட்டு இருக்குது நல்ல கம்பேணி கிடைத்தால் அனுப்பி வைத்துவிடலாம் என்றாரம் அதனால் தான் இவ்வளவு அவசரம் என்றான்.மேலும் எங்க வாப்பவுக்கும் சந்தோஷம் காரணம் வெளிநாட்டிற்கு போக எத்தனையே தடவை முயற்ச்சி செய்தும் அவர்களால் போக முடியவில்லையாம் ஆதால் தன்னால் முடியாத பாக்கியம் தன் மகனுக்காவது கிடைக்கட்டுமே என்று ஆசைப்படுகிறார்கள் என்றான். ஏன்டா படிக்கும் போது வெளிநாட்டுக்கு போகவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் நல்லா படித்துவிட்டு இங்கேயே வேலை கிடைத்து சம்பாதிக்கலாம்புல என்றான் சுப்பு, வண்டிப்பேட்டை பள்ளியில் பாங்கு சொல்லும் சத்தம் கேட்டு மூவரும் வீடு திரும்பலானார்கள் நான் தொழுது விட்டு வீட்டுக்கு போகிறேன் என்று மற்றவர்களிடம் சரபுதீன் விடைப்பெற்றுக்கொண்டான்.மஹ்ரிப் தொழுகை முடிந்தவுடன் வாரந்தோறும் நடைப்பெறும் மார்க்க செற்பொழிவில் கலந்து கொண்டுவிட்டு வாப்பாவும் மகனும் வீடு திரும்பலானார்கள். நளை பாஸ்போர்ட் எடுக்க போகமல் இருக்க வேண்டும் இதைப்பற்றி வாப்பவிடம் பேசவேண்டும் என்ற ஆவாலில் வாப்பாவிடம் கோட்டேவிட்டான் நான் படிக்க வேண்டும் +2 பாஸ் ஆன பிறகு பாஸ்போர்ட் எடுப்பதை பற்றி முடிவு செய்து கொள்ளலாம் என்றவுடன் சவண்ணா காக்கவுக்கு சுர்றென்று கோபம் தலைக்கு ஏறியவராக சத்தம் போட்டுக்கொண்டே வீட்டுக்குள் வந்தார், இவருடை சத்தத்தை கேட்டு அடுப்படியில் மருமகனுக்காக சின்ன வெங்காயத்தை போட்டு ரவா தோசை சுட்டுகிட்டு இருந்த சல்மா ராத்தா அவர்கள் போட்டது போட்டபடி என்னவென்று கூடத்தை நோக்கி வந்தார்கள், ஏன் என்றைக்கும் இல்லாமல் இவ்வள்வு சத்தம் உள்ள மருமவன் இருக்காக மெதுவா பேசக்கூடாத என்றார்கள்.உன் மகன்கிட்யே கேட்டு தெறிந்து கொள் என்று ஒதுங்கி கொண்டார், மகனை நோக்கிய தாய் வாஞ்சையுடன் என்ன நடந்தது என்றார், உம்மா நான் அவசியம் பாஸ்போர்ட் எடுத்துதான் ஆக வேண்டுமா வெளிநாடு போய் தான் ஆக வேண்டுமா என்றவுடன் உம்மாவுக்கும் பகீர் என்று ஆகிவிட்ட்து, காரணம் ஏற்கனவே மூத்த மகளின் கல்யாணத்தை முன்னோர்கள் சேர்த்து வைத்தது குடும்பத்தினர் கொடுத்து உதவியதை வைத்து ஒரு வழியாக முடித்தாகிவிட்டது அடுத்த மகளுக்கோ கல்யாண வயது ஆகிவிட்டது இருந்த ஒரு வீட்டையும் மூத்தமகளுக்கே கொடுத்தவிட்டபடியால் வீடும் கொடுக்கவேண்டும் மகன் இருக்கின்றான் என்ற தைறியத்தில் இருந்தவர்களுக்கு சொலக்கென்று ஆகிவிட்டது (அல்லாஹ்வை மறந்துவிட்டார்கள்) ஒரு விதமாக குடும்பசூழ்நிலையை மகனிடம் சொல்லி அவனை சம்மதிக்க வைத்து விட்டார்கள்.உம்மாவின் சொல்லை கேட்டு மச்சான் சாப்பிட்டுவிட்டு பாக்கி வரும் ரவா தோசைக்காக வாப்பவும் மகனும் காத்திருந்தனர்....................தொடரும்...................................................................................சின்னகாக்கா
புகை பழக்கம்
Posted: 03 Feb 2009 05:36 AM CST
பத்து நபர்கள் மரணமடைவாரெனின் அதில் ஒருவர் புகையிலையின் பக்கவிளைவினால் மரணமடைகிறார். இதை ஒட்டு மொத்தமாக காண்கையில் ஒரு வருடத்திற்கு 5 கோடி இறப்புகளுக்கு சமமாகும். பெரும்பான்மையான மரணங்கள் மாரடைப்பு, புற்று நோய் மற்றும் சுவாச கோளாருகளால் எற்படுகின்றன. அமெரிக்காவில் மூச்சுக் குழாய் அடைப்பினால் மரணமடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக சமீபத்தய தகவல் ஒன்று தெரிவிக்கிறது.புகை பிடிப்பது மரணத்தை நம் வீட்டின் அடி வாசலுக்கு அழைப்புவிடுக்கும் செயல் என்பார்கள். புகை பிடிக்கும் பழக்கமானது புகைப்பவனை மட்டுமல்லாது அவனைச் சூழ்ந்து இருப்பவரையும் பாதிக்கிறது. உறிஞ்சப்படும் புகை புகைப்பவனின் இருதயம், சுவாசப்பை மற்றும் மூளை போன்ற அங்கங்களை பாதிக்கிறது.ஒரு வெண்சுருட்டில் அடங்கியுள்ள தார், நிக்கோடின், மற்றும் பல இரசாயன பொருட்களின் கலவை புற்று நோய், டீபி, மூளையில் இரத்தம் கசியச் செய்தல் என பல நோய்களை உண்டாக்கின்றன.உறிஞ்சப்படும் புகையில் 4000 இரசாயனப் பொருட்களும் அவற்றுள் 200 விஷ இரசாயனங்களும் உள்ளன. மேலும் 43 வகை இரசாயனங்கள் புற்றுநோயை உண்டு பண்ணுபவை. வெளியேற்றப்பட்ட சிகரட்டு புகையை சுவாசிப்பவர்களுக்கு பக்க வாத நோய் ஏற்பட சாத்தியங்கள் அதிகம். பக்கவாத நோய் ஒருவரின் பார்வையிழக்கச் செய்யலாம், உடல் உறுப்புகளின் செயல்பாட்டை பாதிப்படையச் செய்யலாம், உயிரைக் கூட குடித்துவிடலாம்.புகை பழக்கம் கொண்ட கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளில் சராசரியாக 1 முதல் 10 சிகரட்டுகள் புகைப்பாராயின் அவர்களில் 29 சதவிகிதத்தனரின் சிசுக்கள் ஊனமாய் பிறக்கிறது. இதை தவிர்த்து புகைக்கும் பழக்கம் ஒருவரின் பணத்தையும் பாழ்படுத்துகிறது என்பது நாம் அறிந்த விடயமாகும்.கடந்த நான்கு நூற்றாண்டுகளாக புகை பழக்கத்தின் பாதிப்புகள் சரிவர அறியாமலே இருந்தது. ஆதலால் புகை பிடிப்பதின் பக்கவிளைவுகளும் கட்டுபாடின்றி வளர்ந்து கொண்டே இருந்தது. புகையிலையின் பக்க விளைவுகளை உணர்த்தும் நோக்கில் விழிப்புணர்வு பட்டரைகளும் விளம்பரங்களும் அதிகரிக்கப்பட்டன. ஆனால் புகைப்பவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. புகைப்பவரிடையே உண்டாகும் புற்றுநோயும், மாரடைப்பும் பிரிட்டனில் ஏற்படும் 30% மரணத்திற்கு முக்கிய காரணமாய் அமைக்கிறது.புகை பழக்கத்தை விடுவோமேயானல் அதன் பலன்கள் ஐந்து வருடத்தில் நம்மால் உணர முடியும் என்கிறது ஒரு தகவல்.புகைக்கும் பழக்கம் ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும். உடலுறவில் அதிருப்தியும் சுக்கில உற்பத்தியும் குறைந்து போகும். ஒரு ஆய்வின்படி புகைபிடிக்கும் ஆண்களில் 30-40 வயதிற்குட்பட்ட 50 சதவிகிதத்தினருக்கு ஆண்மை வீரியம் குறைந்து காணப்படுவதாகக் கூறப்படுகிறது. புகை பழக்கம் கொண்டவர்கள் விரைவாகவே முதுமைத் தன்மையோடுக் காட்சியளிப்பார்கள். இது புகை பிடிக்காதவரைக் காட்டினும் ஆண்களுக்கு 2 மடங்கும் பெண்களுக்கு 3 மடங்கும் ஒப்பானதாகும். இதற்கு என்ன காரணம்? சிகரட்டு புகை நம் உடலில் காணப்படும் A வகை விட்டமினைக் குறைக்கும். விட்டமின் A நமது தோல் பாதுகாப்பிற்குடையதாகும். இவ்விட்டமின் குறைவினால் இயல்பான வயதை விட முதுமை தோன்றமே முந்தி நின்று காட்சி அளிக்கும். புகையிலையில் காணப்படும் Acetyldehdye எனப்படும் இரசாயனம் நமது உடலில் காணப்படும் C வகை விட்டமீன்களை குறைத்துவிடும் தன்மையைக் கொண்டது. ஒரு துண்டு சிகரட்டு புகைப்பவரின் உடலில் காணப்படும் 20மில்லிகிராம் C வகை வைட்டமின்களை அழிக்கிறது.ஒரு சிகரட்டின் 15% பாதிப்பு புகைப்பவரையும் 85% பாதிப்பு சிகரட்டிலிருந்து வெளியேறும் புகைவழியே சுற்றதாரையும் பாதிக்கிறது. அதாவது புகை உறுஞ்சுபவரை காட்டினும் அவரை சுற்றி இருப்பவருக்கே பாதிப்புகள் பல மடங்கு அதிகமாக உள்ளது. முக்கியமாக குழந்தைகள் பெரியவர்களை காட்டினும் விரைவாக சுவாசிப்பார்கள், அப்படி சுவாசிக்கப்படுபவர்கள் இளம் பிராயத்திலேயே பாதிப்படைகிறார்கள், நோய்க்குற்படுகிறார்கள்.70 கோடி சிறார்கள் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்களின் வீடுகளில் வாழ்வதாக குறிப்பிடுகிறார்கள். சிகரட்டு புகை, சிறார்களின் உடல் மற்றும் சிந்தனை வளர்ச்சியை பாதிக்கக் கூடியது. அமேரிக்க ஆய்வறிக்கை ஒன்று மிதமான சிகரட்டு புகையில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கிடையே நடத்தப்பட ஆய்வின்படி அவர்களிடையே படிக்கும் மற்றும் சிந்திக்கும் திறன் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக காட்டுகிறது.புகை பழக்கம் கொண்டவர்கள் முள்ளங்கி ரசம் உட்கொள்ளும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் புகை பழக்கத்தில் இருந்து விடுபட வாய்ப்புகள் அதிகம் உள்ளதென ஒரு தகவல் விளக்கம் கொடுக்கிறது. சீரிய வாழ்விற்கு புகை பிடிக்காதிருப்போம்

No comments:

Post a Comment